மலரும் பூ
இதழ்களாய் உதிர்த்து - மீண்டும் மலரும் நம்பிக்கை இல்லா விடினும்,
உதிரும் உண்மையை உணர்ந்து,
வாடாது- இதழ் பிரித்து -(நீ) சிரிக்கும் இந்த நொடி ..
இந்த ரோஜாவை -
என் பிரியத்தோடு என்ன ?
உன் முகத்தோடும் ஒப்பனை சரிதானே..?
ஆசையை உவமையில் சொல்லும் ஓர் கற்பனை...
இனிய நொடியும்-
இந்த நொடி மட்டும்.
இந்த ஒவ்வொரு நொடி மட்டும்!!
Arjunan.I