Friday, August 15, 2014

"தோல்வி நாட்கள் "



"தோல்வி நாட்கள் "

அத்தியாயம் 11

"தோல்வி வலிமையை தந்தது
வெற்றி வலியை தானே தந்தது "
இதுவரை...
 
வேலன் மரணம்

இனி

தனிமையில் கருப்பன் .


அப்பா அழுகைக்குள் ஒழிந்து கொண்டிருந்த வார்த்தைகள்

"உன் அத்தை மகன் வேலன் ....
உன் அத்தை மகன் வேலன்  கார் விபத்தில் செத்துட்டான்.

அரசனுக்கு ஒரே அக்கையின் மகன்
கருப்பனுக்கு உறவில் போலி இல்லையென்று புரிய வைத்த ஒரே பந்தம்.
வேலன் - பிணமாய்.

சுற்றி சொந்தங்கள்.
அருகில் மனைவி
மேலே குழந்தை - இருந்தமையால் உன் உதடு விரிந்து முகம் மலர்ந்ததோ ? இதயம் மட்டும் துடிகலையேடா ?
குழந்தைக்காக எழுந்து வந்துவிட மாட்டிங்களா?
முகம் தெரியாத குரல்கள்.
கருப்பனுக்கு கண்ணீர் மட்டுமே பேசியது.
"சுய தொழில் சொல்லி கொடுத்து திக்கு திசை காமிச்சு கொடுத்தவன் நீ"
சுழல்ல சிக்கி, நடுவுல நிக்கிறேன் - துடுப்பா தோள் கொடுத்து தூக்கிடுவன்னு நம்பி வந்தேன். என்னை அவசரமுன்னு என்னை தூக்கவச்ச ?
சுடுகாட்டு வழியில்
பஞ்சுல சுத்தியவனை
பாடையோடு தோளில் வைத்து தூக்கி போகும் வழியில் வேலனை கேள்வி கேட்டுக் கொண்டே நடந்தான்.

சடங்குகள் முடிந்தது.
எளவு வீடு - இருள் வீசிற்று. "சோலி பார்க்கணும்னு" சொல்லிக்காமல் விடை பெற்றான்.

வானுக்கு நட்சத்திரம்
வாழ்வுக்கு நம்பிக்கை
கருப்பனுக்கு வாய்க்கபெற்ற நம்பிக்கை நட்சத்திரம் - வேலனை வானுக்கே தாரை வார்த்து விட்டு,
உறைந்த கண்ணீர் சுமையோடு விற்பனையை தொடங்கினான்.

தோல்வியை கடந்த இழப்பு.
வலியை கடந்த வேதனையை கொடுத்தது.
பகட்டையும் பதட்டத்தையும் பிளந்து பக்குவம் வந்தது கருப்பனுக்கு.

"மாற்றம் ஒன்றே மாறாதது "
பழமொழி கூட காலப் போக்கில் வார்த்தை வடிவம் மாறும்.
பாவம் கருப்பன் வாழ்கை மாறவில்லை.

கைக்குள் அடங்கும் சம்பளம்
கடித்து விடாத கடன் வட்டி
விற்பனையாளன் வேலை
ஆதரவு தரும் அம்மா
தட்டிக்கொடுக்கும் தந்தை,
அனைத்துமாய் நட்பு
     கருப்பன் வாழ்கை மாறுவதே இல்லை.

பட்டம் பெற்றான்
முதலீடு கிடைத்தது
மென்பொருள் விற்பனை சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றான்.
வேலை கிடைக்காதோர் செய்யும் விற்பனையாளன் வேலையை
வரமாக மாற்றினான்
விரும்பியவர்கள் பயிற்சி பெற கூடம் அமைத்தான்.
வெற்றிகள் வந்தன - ஆனால் கருப்பனுகோ
அவன் தேடிய தோல்வியின் காரணங்களுக்கு விடையாகவே கிடைத்தன.

என் வியர்வையின் வலிக்கு நீ விடையாய் வந்திருந்தால் வெற்றியே உன்னை வணங்கிருப்பேன். என் வேதனையையும் இழப்பையும் விலையாய் பெற்று தானே வந்தாய். விலகிப் போ..... கருப்பன் மாறவேயில்லை
 ***************************************நிறைவுற்றது***************************
Arjunan.I

No comments:

Post a Comment