Friday, August 15, 2014

"தோல்வி நாட்கள் "



 "தோல்வி நாட்கள் "

அத்தியாயம் 10

"தளபதி"
இதுவரை...

காதலும் பொய்த்தது

இனி
காலமும்  பொய்த்தது 
      
காதல் தோல்வியில்...
போதும் போதும்னு காதை பொற்றிக் கொண்டான். - இனி கனவு தான் காதலென்று கடை விரித்து விற்பனை செய்தான்.
தோல்வி உணர்வு அவன் சுவாசத்தோடு கலந்தது,
அவனை ஒட்டிக்கொண்ட தனிமை போய், அவன் வேலை நேரம் தவிர தனிமையை தேடி பயணமானான்.
உணவும் உறக்கமும் நேரம் கைமீறி - கணக்குகள் தப்பாய் போக
வேலை செய்தான் விற்பனை நடக்கவில்லை.

வங்கிகளின் வாசலிலும், முதலீடு செய்பவர்கள் முன்னாலும்
வாய்ப்பு கேட்டான், வாழ்வுக்கல்ல .. விற்பனைக்கு .. வெற்றிக்கு ..
"ஓடும் குதிரைக்கு மவுசு கம்மி, ஜெயிக்குர குதிரைக்கு தான் பந்தயம் போய் ஒரு முறை ஜெயிச்சுட்டு வா "
புரியவைத்தனர்  பந்தைய பண ராஜாக்கள்.

ஒரு நிஜம், ஒரு துவக்கம், ஒரு மையில்கல் ஒரே ஒரு வெற்றி
புதைக்காத புதையலை தேடினான். கனவுக்காக அல்ல
தோற்றுப்போன அவன் காதல் தோல்விக்கான காரணம் கண்டுபுடிக்க.

சென்னைக்கு விடுமுறையில் .

சென்னையில் வந்து இறங்கினான்,
அவசர சத்தங்களிடையே, எங்கோ சிதறும் தமிழை தேடிக் கேட்டு ஏங்கி சிரித்தான்.
அவனுள் ஒழிந்து கொண்டிருந்த உல்லாசங்கள் ஒருமுகப் பட்டன.

உச்சி வெயிலிலும் உள்ளம் குளிர்ந்து, வந்த வியர்வையையும்,
சட்டையோடு துடைத்துக்  கொண்டான்.

வாரம்தோறும் வரும்  ஞாயிற்று கிழமை போல அடிக்கடி அவனை கடந்து செல்லும் செல்ல சுடிதார்கள்.
பண்டிகை தினம் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தாவணிகள்.
அடடா என் தமிழச்சி இன்றி தமிழுக்கும் தான் ஏது அழகு ?

முகங்களை பார்த்து அதரவு பெற்று
தனிமை வேண்டாம், தந்தை தாய் கூடவே தங்கிடலம்னு தோணிற்று.
ரொம்ப நாள் பிறகு நண்பர்களோடு இரண்டாம் ஆட்டம் சினிமாக்கு போயிடு வந்து படுத்தான் .
எங்கிருந்தோ வந்த குளிர் காற்று அவன் உள்ளதை வருடியது.
தோல்வி புண்களுக்கு மயிலிறகாய் மை பூசின.

அன்றைய போரில் உடைவாள் தொலைத்து உயிரோடு மட்டும் திரும்பிய தளபதியாய் உணர்ந்தான். கண்கள் சுழட்டிக் கொண்டு வந்தது கருப்பனுக்கு.


அரசன் அலறும் சத்தம்,
வள்ளி ஒரு புறம் சுவரோடு சாயிந்து அழுதாள்.
அதிகாலை நேரம், சுய நினைவோடு எழுந்துக்கொள்ள நேரம் பிடித்தது கருப்பனுக்கு.

வீடே அழுகிறது. " அப்பா என்ன அச்சு ?
                                  என்னாச்சு அம்மா ? போன்ல யாரு ?
                                  யாருக்கென்ன "?

அப்பா அழுகைக்குள் ஒழிந்து கொண்டிருந்த வார்த்தைகள்

"உன் அத்தை மகன் வேலன் ....
உன் அத்தை மகன் வேலன் ....

அத்தியாயம் 11
**

No comments:

Post a Comment